இலங்கை பாடசாலைகள் சங்கத்தினால் நடாத்தப்படுகின்ற 15 வயதுப் பிரிவு பிரிவு 3 இற்கான முதலாவது சுற்றுத் தொடர் கடந்த 4ம் திகதி கிளிநொச்சி மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.

அக்கராயன் மகா வித்தியாலயம் எதிர்  கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கும் இடையில் நடைபெற்ற போட்டியில் கிளிநொச்சி மகா வித்தியாலய அணி 9 இலக்குகளால் வெற்றி பெற்றது.

இலங்கை பாடசாலைகள் சங்கத்தினால் நடாத்தப்படுகின்ற வயது 15 பிரிவு 3 இற்கான முதலாவது சுற்று தொடரில் இரண்டாவது போட்டி கடந்த 7ம் திகதி கிளிநொச்சி மகா வித்தியாலய மைதானத்தில்  முருகானந்தா கல்லூரி மற்றும்  கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கும் நடைபெற்றது.

இப்போட்டியில் கிளிநொச்சி மகா வித்தியாலய அணி இன்னிங்ஸ் மற்றும் 118 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.